×

திருவள்ளூர் மாவட்ட வரம்பிலுள்ள நீர்நிலைகளில் எண்ணெய் கழிவுகள் படரவில்லை : தலைமைச் செயலாளர்

சென்னை : திருவள்ளூர் மாவட்ட வரம்பிலுள்ள நீர்நிலைகளில் எண்ணெய் கழிவுகள் படரவில்லை என்று தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “திருவள்ளூர் மாவட்ட நீர்நிலை பகுதிகளில் இருந்து நீர் மாதிரிகள் சேகரித்து பகுப்பாய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி 11-ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. எண்ணெய் கழிவுகள் பரவுவதை தடுக்க தடுப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன,” என்று தெரிவித்தார்.

The post திருவள்ளூர் மாவட்ட வரம்பிலுள்ள நீர்நிலைகளில் எண்ணெய் கழிவுகள் படரவில்லை : தலைமைச் செயலாளர் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Chief Secretary ,Chennai ,Shivdas Meena ,Tiruvallur district.… ,Tiruvallur district ,
× RELATED தடையின்றி மின்சாரம்: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை